முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 322. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 322. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைமகனது வரவு நீட்டித்ததாகத் தோழி இயற்பழித்த விடத்து,தலைவன் வர, அஃதுணர்ந்த தலைவி, "நாம் அவரூருக்குப் போய்அவரோடு பழகுவோம்" என்று கூறியது.)
அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து கான நண்ணிய சிறுகுடிப் பட்டென இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு |
5 |
மருவின் இனியவு முளவோ செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே. |
|
- ஐயூர் முடவனார். |
முடிபு: தோழி, ஆமான்குழவி எடுப்ப வெரீஇத் தீர்ந்து குடிப்பட்டென, ஓம்ப மரீஇ நயந்து வில்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ?நடந்து செல்வாம்.
கருத்து: தலைவன் இருக்குமிடத்துக்கு யான் போவோமாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 320 | 321 | 322 | 323 | 324 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 322. குறிஞ்சி - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, தலைவன், குறிஞ்சி, கூற்று, கலந்து, நடந்து, மருவின், இளைய, எட்டுத்தொகை, சங்க