முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 321. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 321. குறிஞ்சி - தோழி கூற்று
(நொதுமலர் வரையப் புக்க காலத்தில், "நான் அறத்தொடு நிற்பேன்"என்று தலைவிக்குத் தோழி கூறியது.)
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன் சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன் நடுநாள் வந்து நம்மனைப் பெயரும் மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை மன்ற மரையா இரிய ஏறட்டுச் |
5 |
செங்கண் இரும்புலி குழுமும் அதனால் மறைத்தற் காலையோ அன்றே திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே. |
|
- ...... |
முடிபு: அன்னை, அரிவை, நின் துணை, மார்பினன், கண்ணியன்,வந்து பெயரும்; புலி ஏறு அட்டுக் குழுமும்; அதனால் மறைத்தற்காலைஅன்று; நம் கதவு திறப்பல், நீ வேண்டு.
கருத்து: நான் அறத்தொடு நிற்பேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 319 | 320 | 321 | 322 | 323 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 321. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வந்து, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அதனால், பெயரும், குழுமும், அன்னை, புலி, திறப்பல், நிற்பேன், சங்க, எட்டுத்தொகை, நான், அறத்தொடு, மார்பினன், கண்ணியன்