முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 316. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 316. நெய்தல் - தலைவி கூற்று
(வரைவிடை வேறுபட்ட தன்னை வினவிய தோழிக்கு, "தலைவன்இன்னும் வந்திலன்; என் துன்பத்தை அன்னையறியின் உயிர் நீப்பேன்.அங்ஙனம் அறிவாளோவென அஞ்சி வேறுபட்டேன்" என்பதுபடத்தலைவி கூறியது.)
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும் நோய்மலி வருத்தம் அன்னை யறியின் உளெனோ வாழி தோழி விளியா துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை ஓரை மகளி ரோராங் காட்ட |
5 |
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி ஓங்குவரல் விரிதிரை களையும் துறைவன் கொல்லோ பிறவா யினவே. |
|
- தும்பிசேர் கீரனார். |
முடிபு: தோழி, துறைவன் சொல் பிற ஆயின; வருத்தம் அன்னைஅறியின் உளெனோ?
கருத்து: தலைவன் வாராமையால் துன்புற்ற என் நிலையைத் தாய்அறியின் யான் உயிர் நீப்பேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 314 | 315 | 316 | 317 | 318 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 316. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், வருத்தம், நெய்தல், தோழி, குறுந்தொகை, தலைவி, கூற்று, துறைவன், சொல், தலைவன், உயிர், எட்டுத்தொகை, சங்க, நீப்பேன், உளெனோ