முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 314. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 314. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த விடத்து வேறுபட்டதலைவியை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்தது; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல் தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப் பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும் வாரார் வாழி தோழி வரூஉம் இன்னுறழ் இளமுலை ஞெமுங்க |
5 |
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே. | |
- பேரிசாத்தனார். |
முடிபு: தோழி, சுரனிறந்தோர் ஞெமுங்க மாலையும் வாரார்.
கருத்து: கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 312 | 313 | 314 | 315 | 316 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 314. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, தோழி, குறுந்தொகை, வாரார், ஞெமுங்க, மாலையும், கார்ப்பருவம், எட்டுத்தொகை, சங்க, அவர், வந்திலர்