முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 31. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 31. மருதம் - தலைவி கூற்று
(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த |
5 |
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. | |
- ஆதிமந்தியார். |
முடிபு: மாண் தக்கோனைக் காணேன்; யானும் ஓர் ஆடுகள மகள்; குரிசிலும் ஓர் ஆடுகள மகன்.
கருத்து: என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உளன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 31. மருதம் - தலைவி கூற்று, ஆடுகள, இலக்கியங்கள், தலைவி, கூற்று, யானும், ஆடுகின்ற, மருதம், குறுந்தொகை, காணேன், கண்ணும், உள்ள, பொருந்திய, மகளே, செய்த, என்னோடு, சங்க, எட்டுத்தொகை, செய்து, நெகிழச், மகளிர், தலைவன், துணங்கை