முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 303. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 303. நெய்தல் - தோழி கூற்று
(“தலைவி வேறுபாடு மிக்கனள்; ஆதலின் தாய் இற்செறிக்கக்கருதினாள்; இனி இவளை மணந்துகோடலே தக்கது” என்று தோழிதலைவனுக்கு உரைத்தது.)
கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப் பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும் |
5 |
இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழற் பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
|
- அம்மூவனார். |
முடிபு: துறைவ, என் தோழி அலவன் ஆட்டிய ஞான்றே நெகிழ்ந்தவளையல்; ஈங்குப் பசந்தனள் மன்.
கருத்து: இனித் தலைவியை மணத்தலே ஏற்புடையது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 301 | 302 | 303 | 304 | 305 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 303. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, நெய்தல், அலவன், ஆட்டிய, ஞான்றே, பசந்தனள், துறைவ, எட்டுத்தொகை, சங்க, நெகிழ்ந்த