முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 298. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 298. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் மடலேறத் துணிந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.)
சேரி சேர மெல்ல வந்துவந் தரிது வாய்விட் டினிய கூறி வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை |
5 |
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மானப் பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. |
|
- பரணர். |
முடிபு: தோழி, சேரி சேர வந்து வாய்விட்டுக் கூறிப் பெயர்ந்துஉறையும் அவன் நோக்கம் நினையாய்; அவன் நிலை பரிசில் மானப்பிறிதொன்று குறித்தது.
கருத்து: தலைவன் மடலேற நினைந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 296 | 297 | 298 | 299 | 300 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 298. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், வந்து, குறிஞ்சி, அவன், கூற்று, குறுந்தொகை, நினையாய், பரிசில், இனிய, நோக்கம், சேரி, எட்டுத்தொகை, சங்க, தலைவன், மெல்ல, கூறி