முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 292. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 292. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் இரவுக்குறிக்கண் வந்து சிறைப்புறத்தானாக, அதனைஅறிந்த தோழி தலைவிக்குக் கூறுவாளாய், “நம் தாய், ஒரு நாள் தலைவன் வந்ததை அறிந்தாள்; அறிந்த அன்று முதல் முன்னையினும் மிகப் பாதுகாத்து வருகின்றாள்” என்று கூறி விரைவில் வரைந்து கோடலே நன்று என்பதைப் புலப்படுத்தியது.)
மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற் கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல |
5 |
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே. |
|
- பரணர். |
முடிபு: அன்னை, ஒரு நாள் விருந்தினன் வந்தெனத் துஞ்சல்இலள்; நிரையத்துச் செலீஇயர்.
கருத்து: அன்னையின் காப்பு இப்பொழுது மிக்கது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 290 | 291 | 292 | 293 | 294 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 292. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, நிரையத்துச், அன்னை, சென்ற, விருந்தினன், நாள், எட்டுத்தொகை, தாய், சங்க