முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 291. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 291. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்குத் தலைவி இவ்விடத்தினள், இவ்வியல்பினள் என்று கூறியது.)
சுடுபுன மருங்கிற் கலித்த வேனற் படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே இசையின் இசையா இன்பா ணித்தே கிளியவள் விளியென எழலொல் லாவே அதுபுலந் தழுத கண்ணே சாரற் |
5 |
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே. |
|
- கபிலர். |
முடிபு: கொடிச்சியின் கைக்குளிர் இன்பாணித்து; கிளி எழலொல்லா;கண் மலர் போன்றன.
கருத்து: தலைவி தினைப்புனத்தில் காவல் செய்து கொண்டு இருக் கின்றாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 289 | 290 | 291 | 292 | 293 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 291. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உள்ள, இடத்தே, போன்றன, சங்க, எட்டுத்தொகை, தலைவி, பூத்த