முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 285. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 285. பாலை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் கண்டு வேறுபட்ட தலைவியைநோக்கித் தோழி வற்புறுத்தினாளாக, அவளுக்கு, "தலைவர் கூறிய பருவம் இதுவே. யான் ஒவ்வொரு நாளும் அவர் வரவை நோக்கி நிற்கின்றேன்; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
வைகல் வைகல் வைகவும் வாரார் எல்லா எல்லை எல்லையுந் தோன்றார் யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர் சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ் புன்புறப் பெடையொடு பயிரி யின்புற |
5 |
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை ஊனசைஇ யொருபருந் திருக்கும் வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே. |
|
- பூதத் தேவனார். |
முடிபு: தோழி, மலையிறந்தோர் வைகவும் வாரார்; எல்லைஎல்லையும் தோன்றார்; யாண்டுளர் கொல்? இவர் சொல்லிய பருவமோ இதுவே.
கருத்து: தாம் கூறிச் சென்ற பருவம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 283 | 284 | 285 | 286 | 287 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 285. பாலை - தலைவி கூற்று, பருவம், இதுவே, தோழி, சொல்லிய, இலக்கியங்கள், தலைவி, கூற்று, வந்திலர், குறுந்தொகை, பாலை, தலைவர், தோன்றார், சென்ற, இவர், யாண்டுளர், உடைய, பருவமோ, மீண்டு, அவர், சங்க, எட்டுத்தொகை, கூறிச், வைகல், வைகவும், வாரார்