முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 284. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 284. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்தில்,ஊரினர் அலரை அஞ்சிய தலைவியை நோக்கி, "இவ்வூரினர் அறிவிலர்போலும்!" என்று தோழி கூறியது.)
பொருத யானைப் புகர்முகங் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன் ஒண்செங் காந்தள் அவிழும் நாடன் அறவ னாயினும் அல்ல னாயினும் நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ |
5 |
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி கொன்னிலைக் குரம்பையி னிழிதரும் இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே. |
|
- மிளைவேள் தித்தனார். |
முடிபு: நாடன் அறவனாயினும், அல்லனாயினும், இச்சிறு குடியோர் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?
கருத்து: தலைவன் செயல் பற்றி நம்மை ஏசுவோர் அறிவில்லாதவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 282 | 283 | 284 | 285 | 286 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 284. குறிஞ்சி - தோழி கூற்று, தலைவன், இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கொல்லோ, உடைய, னாயினும், சங்க, எட்டுத்தொகை, நாடன்