முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 283. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 283. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்" என்று தலைவி கூறியது.)
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி யென்றும் கூற்றத் தன்ன கொலைவேல் மறவர் |
5 |
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த படுமுடை பருந்துபார்த் திருக்கும் நெடுமூ திடைய நீரில் ஆறே. |
|
- பாலை பாடிய பெருங்கடுங்கோ. |
முடிபு: தோழி, ‘சிதைப்போர் உளரெனப் படார்; இல்லோர் வாழ்க்கை இளிவு' எனச் சொல்லிய வன்மை காட்டி ஆறு சென்றனர்; வாழி.
கருத்து: தலைவர் சென்ற வழியினது கொடுமையை நினைதலால்ஆற்றாமை உண்டாகின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 281 | 282 | 283 | 284 | 285 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 283. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, சென்ற, அவர், கூற்று, தோழி, குறுந்தொகை, சென்றனர், வன்மை, வாழி, சொல்லிய, தலைவர், தங்கி, செய்யும், சங்க, எட்டுத்தொகை, பொருள், உளரெனப், இல்லோர், வாழ்க்கை