முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 277. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 277. பாலை - தோழி கூற்று
(தலைமகன் குறித்துச் சென்ற பருவம் வருங்காலம் யாதென்று தோழி அறிவரை வினாவியது.)
ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச் செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது ஓரிற் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே |
5 |
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவ தென்றி அக்கால் வருவரெங் காத லோரே. |
|
- ஓரிற் பிச்சையார். |
முடிபு: வாடை எக்கால் வருவதென்றி; அக்கால் எம் காதலோர்வருவர். நீ தெருவில் பிச்சையை மாந்தி நீரைப் பெறீஇயர்.
கருத்து: வாடை வீசும் பருவம் எப்பொழுது வரும்?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 275 | 276 | 277 | 278 | 279 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 277. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வாடை, பாலை, குறுந்தொகை, கூற்று, உடைய, எக்கால், அக்கால், எப்பொழுது, பிச்சையை, தெருவில், எட்டுத்தொகை, சங்க, பருவம், ஓரிற், மாந்தி