முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 260. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 260. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி, "நன்னிமித்தங்கள் உண்டாகின்றன; ஆதலின் தலைவர் வந்து விடுவர்; நீ ஆற்றுக" என்று தோழி கூறியது.)
குருகும் இருவிசும் பிவரும் புதலும் வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும் வருவர்கொல் வாழி தோழி பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை |
5 |
வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக் கன்றி லோரா விலங்கிய புன்றா ளோமைய சுரனிறந் தோரே. |
|
- கல்லாடனார். |
முடிபு: தோழி, குருகும் இவரும்; புதலும் நெகிழ்ந்தன; தோளுஞ்செற்றும்; சுரன் இறந்தோர் வருவர்.
கருத்து: நன்னிமித்தங்கள் உண்டாதலின் தலைவர் வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 258 | 259 | 260 | 261 | 262 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 260. பாலை - தோழி கூற்று, தோழி, பாலை, இலக்கியங்கள், தலைவர், குறுந்தொகை, கூற்று, வருவர், உடைய, புதலும், குருகும், ஆதலின், எட்டுத்தொகை, சங்க, நன்னிமித்தங்கள்