முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 26. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 26. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் தெய்வமென்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனொடு நட்புப் பூண்டாள்; அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.)
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் தகாஅன் போலத் தான்றீது மொழியினும் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே |
5 |
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும்அக் கொடியோ னையே. |
|
- கொல்லனழிசி. |
முடிபு: நாடன் தாகன்போலத் தான் தீதுமொழியினும் அக் கொடி யோனைக் கடுவனும் அறியும்; ஆதலின் கண்டது பொய்க்குவ தன்று.
கருத்து: இத் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 26. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, உடைய, குறுந்தொகை, கூற்று, கண்டது, நாடன், கடுவனும், இருந்த, ஆதலின், பொய்க்குவ, குரங்கும், சங்க, எட்டுத்தொகை, தலைவியின், காரணம், மலர்ந்த, வேங்கை