முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 241. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 241. குறிஞ்சி - தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "யான்ஆற்றுவதற்கு எண்ணியும் என் கண்கள் தாமே அழுதன; என் அவசநிலைக்கு யாது செய்வேன்!" என்று தலைவி கூறியது.)
யாமெங் காமந் தாங்கவும் தாந்தம் கெழுதகை மையி னழுதன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி ஏறா திட்ட ஏமப் பூசல் |
5 |
விண்டோய் விடரகத் தியம்பும் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. |
|
- கபிலர். |
முடிபு: தோழி, யாமே காமம் தாங்கவும் கண்தாம் கெழுதகைமையின்அழுதன.
கருத்து: யான் ஆற்ற எண்ணியும் ஆற்றாமை மீதூர்கின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 239 | 240 | 241 | 242 | 243 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 241. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, குறுந்தொகை, குறிஞ்சி, வேங்கை, உடைய, தாங்கவும், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, எண்ணியும், அழுதன