முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 240. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 240. முல்லை - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "நான் அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; மாலைக் காலத்தில் அது மறைகின்றது; ஆதலின்ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர் வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி வாடை வந்ததன் றலையும் நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் |
5 |
கடலாழ் கலத்திற் றோன்றி மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே. |
|
- கொல்லனழிசியார். |
முடிபு: தோழி, கஞல வாடை வந்ததன்றலையும் பொரக் குன்று மறையும்; கண்டிசின்.
கருத்து: அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; அது மறைவதால்ஆற்றேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 238 | 239 | 240 | 241 | 242 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 240. முல்லை - தலைவி கூற்று, தலைவி, முல்லை, இலக்கியங்கள், கூற்று, உடைய, தோழி, நோக்கி, காலத்தில், குறுந்தொகை, வாடை, கண்டிசின், குன்று, மறையும், அவர், எட்டுத்தொகை, சங்க, மலையை, ஆற்றினேன், மாலைக்