முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 223. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 223. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வற்புறுத்திய தோழிக்கு,“முன் ஒரு கால் நின்சொற் கேட்டுத் தலைவனைக் கண்டு என் நலன் இழந்தேன். நலன் இழந்த புலம்பொடு இப்பொழுதும் கவல்வேனாயினேன்” என்று தலைவி கூறியது.)
பேரூர் கொண்ட ஆர்கலி விழவில் செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண் நல்லோர் நல்ல பலவாற் றில்ல தழலும் தட்டையும் முறியுந் தந்திவை ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி |
5 |
அன்னை யோம்பிய ஆய்நலம் என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே. |
|
- மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார். |
முடிபு: செல்வாம் செல்வாம் என்றி; நல்ல பல; நலம் என்னைக்கொண்டான்; யாம் இனி இன்னம்.
கருத்து: தலைவனால் நலன் இழந்தமை நினைந்து வேறுபட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 221 | 222 | 223 | 224 | 225 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 223. குறிஞ்சி - தலைவி கூற்று, செல்வாம், இலக்கியங்கள், தலைவி, கூற்று, நலன், குறிஞ்சி, நல்ல, குறுந்தொகை, யாம், என்றி, தலைவன், எட்டுத்தொகை, சங்க