முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 219. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 219. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக்கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)
பயப்பென் மேனி யதுவே நயப்பவர் நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே வல்லா கூறியிருக்கு முள்ளிலைத் |
5 |
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. |
|
- வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார். |
முடிபு:தோழி, பயப்பு என் மேனியது; நயப்பு ஆரிடையது;செறிவும் இகந்தன்று; அறிவு இருக்கும்; எந்நீரிரோ எனின், சேர்ப்பர்க்குஇடம்.
கருத்து: தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 217 | 218 | 219 | 220 | 221 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 219. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, எனது, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவர், அறிவு, உடைய, இருக்கும், கூறி, எட்டுத்தொகை, சங்க, யதுவே, தோழி