முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 214. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 214. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியின் வேறுபாடு கண்டு தாய் முதலியோர் வெறி யாட்டெடுத்த இடத்து, “இவளுக்குத் தழையுடையுதவி அன்பு செய்தான் ஒருவன் இருப்ப, அதனை அறியாது இது முருகனால் வந்தது என மயங்கி வெறியெடுப்பதனால் பயனில்லை” என்று தோழி கூறி உண்மையை வெளிப்படுத்தியது.)
மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ் அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயல |
5 |
தரலை மாலை சூட்டி ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே. |
|
- கூடலூர்கிழார். |
முடிபு: செயலை ஒழிய அரலை மாலை சூட்டி இவ்வூர் ஏமுற்றன்று.
கருத்து: தலைவிக்குத் தழையுடை அளித்த அன்பன் ஒருவன்உளன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 212 | 213 | 214 | 215 | 216 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 214. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மாலை, ஒழிய, சூட்டி, சங்க, எட்டுத்தொகை, செயலை