முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று
குறுந்தொகை - 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.)
காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே. |
5 |
- மிளைப்பெருங் கந்தனார். |
முடிபு: பெருந்தோளோயே, காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; அது விருந்தே.
கருத்து: காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 202 | 203 | 204 | 205 | 206 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று, காமம், இலக்கியங்கள், பாங்கன், குறுந்தொகை, குறிஞ்சி, கூற்று, விருந்தே, அன்று, பிணியும், அணங்கும், எட்டுத்தொகை, என்ப, சங்க