முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 203. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 203. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் புக்க தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராகஇருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்புபரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக்கூறியது.)
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் மரந்தலை தோன்றா ஊரரு மல்லர் கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ ஒழுகும் என்னைக்குப் |
5 |
பரியலென் மன்யான் பண்டொரு காலே. | |
- நெடும் பல்லியத்தனார். |
முடிபு: நாட்டரு மல்லர்; ஊரரும் அல்லர்; நண்ணுவழியிருந்தும்ஒரீஇயொழுகும் என்னைக்குப் பண்டொருகால் யான் பரியலென்மன்.
கருத்து:இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும்தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 201 | 202 | 203 | 204 | 205 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 203. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், மருதம், கூற்று, மல்லர், யான், குறுந்தொகை, என்னைக்குப், முன்பு, இப்பொழுது, எட்டுத்தொகை, சங்க, நாட்டரு