முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 201. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும்மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)
அமிழ்த முண்கநம் அயலி லாட்டி பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லி யம்புளி மாந்தி யயலது முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும் |
5 |
கழைநிவந் தோங்கிய சோலை மலைகெழு நாடனை வருமென் றாளே. |
|
- ......... |
முடிபு: அயலிலாட்டி நாடனை வருமென்றோள்; அமிழ்தம் உண்க!
கருத்து: தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்குஉறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 199 | 200 | 201 | 202 | 203 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, மூங்கிற், நாடனை, அயலிலாட்டி, அவள், தோழி, எட்டுத்தொகை, சங்க, முன்பு, தலைவன்