முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 195. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 195. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ!” என்று தலைவி கூறி வருந்தியது.)
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப் படர்சுமந் தெழுதரு பையுள் மாலை யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர் இன்னா திரங்கும் என்னார் அன்னோ தைவரல் அசைவளி மெய்பாய்ந் தூர்தரச் |
5 |
செய்வுறு பாவை யன்னவென் மெய்பிறி தாகுதல் அறியா தோரே. |
|
- தேரதரனார். |
முடிபு: என் மெய் பிறிதாகுதலை அறியாதோர், வேண்டுவினைமுடிநர் யாண்டுளர் கொல்? இரங்கு மென்னார்.
கருத்து: என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும்மீண்டாரல்லர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 193 | 194 | 195 | 196 | 197 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 195. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, கூற்று, எனது, தாம், தலைவர், காலத்தில், யாண்டுளர், துன்பத்தைத், எட்டுத்தொகை, சங்க, தரும், இம்மாலைக்