முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 180. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 180. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறிவற்புறுத்தியது.)
பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந் தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன பைத லொருகழை நீடிய சுரனிறந்து எய்தினர் கொல்லோ பொருளே யல்குல் |
5 |
அவ்வரி வாடத் துறந்தோர் வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே. |
|
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
முடிபு: துறந்தோர் பொருள் எய்தினர் கொல்லோ?
கருத்து: தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 178 | 179 | 180 | 181 | 182 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 180. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், சென்ற, கூற்று, குறுந்தொகை, பாலை, எய்தினர், கொல்லோ, துறந்தோர், இலரோ, தாம், எட்டுத்தொகை, சங்க, பொருளைப்