முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 162. முல்லை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 162. முல்லை - தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட செயல் முடித்து மீளும்பொழுது வழியில் அரும்பியிருந்த முல்லையைப் பார்த்து, ‘நீ தனித்திருப்போரை நோக்கி அரும்பால் எள்ளி நகையாடல் தகுமோ?” என்று கூறியது.)
கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப் பலர்புகு தரூஉம் புல்லென் மாலை முல்லை வாழியோ முல்லை நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை போலக் காட்டல் |
5 |
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. | |
- கருவூர்ப் பவுத்திரனார். |
முடிபு: முல்லை, வாழி! முல்லை, புலத்து மாலையில் நீ முகையின் முறுவல் கொண்டனை; தமியோர் மாட்டு நகுவை போலக் காட்டல் தகுமோ?
கருத்து: நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 160 | 161 | 162 | 163 | 164 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 162. முல்லை - தலைவன் கூற்று, முல்லை, இலக்கியங்கள், தகுமோ, குறுந்தொகை, தலைவன், கூற்று, போலக், நகுவை, தமியோர், முல்லையே, கொண்டனை, காட்டல், எள்ளி, சங்க, எட்டுத்தொகை, தலைவியைப், பிரிந்த, முகையின், முறுவல்