முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 157. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 157. மருதம் - தலைவி கூற்று
(பூப்பு எய்திய தலைமகள் அதனை மறைத்துக் கூறுவாளாய், “வைகறை வந்தது; இனித் தலைவனைப் பிரியநேருமென்று அஞ்சுகின்றேன்” என்று சொல்லியது.)
குக்கூ வென்றது கோழி அதன்எதிர் துட்கென் றன்றென் தூய நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
முடிபு: கோழி குக்கூவென்றது; நெஞ்சம், துட்கென்றன்று.
கருத்து: தலைவனை இனிப் பிரிந்திருத்தல் வேண்டுமென்று அஞ்சுகின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 155 | 156 | 157 | 158 | 159 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 157. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், மருதம், நெஞ்சம், குறுந்தொகை, கூற்று, தலைவி, எனது, எட்டுத்தொகை, சங்க, கோழி