முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 155. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 155. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.)
முதைப்புனங் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் தன்றே மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயில் இறும்பி னார்ப்பச் சுரனிழிபு |
5 |
மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரும் என்னும் உரைவா ராதே. |
|
- உரோடகத்துக் காரத்தனார். |
முடிபு: பொழுதோ வந்தன்று; விருந்தயர்மார் தேர் வருமென்னும் உரை வாராது.
கருத்து: மாலைக் காலம் வரவும் தலைவர் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 153 | 154 | 155 | 156 | 157 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 155. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, முல்லை, பொழுது, மாலைக், தேர், பொருட்டு, சென்ற, எட்டுத்தொகை, சங்க, வந்திலர், பொழுதோ