முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 15. பாலை - செவிலி கூற்று
குறுந்தொகை - 15. பாலை - செவிலி கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றதைத் தோழியால்அறிந்த செவிலி, ‘‘நம் மகளும் அவள் அன்பனும் பாலையைக் கடந்து சென்று இதற்குள் மணம் புரிந்து கொண்டிருப்பர்; அதனால் அவர்களுடைய நட்பு உலகறிய உறுதி பெற்றதாகும்’’ என்று நற்றாய்க்குக் கூறியது.)
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு |
5 |
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. | |
- அவ்வையார். |
முடிபு: விடலையொடு மடந்தை நட்பு வாயாகின்று.
கருத்து: தலைவி தன் தலைவனுடன் சென்றனள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 15. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், செவிலி, உடைய, பாலை, குறுந்தொகை, கூற்று, மடந்தை, விடலையொடு, உள்ள, தோழி, தலைவி, எட்டுத்தொகை, சங்க, தலைவனுடன், மணம், நட்பு