முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 141. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 141. குறிஞ்சி - தலைவி கூற்று
(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் செல்கென் றோளே அன்னை எனநீ சொல்லின் எவனோ தோழி கொல்லை நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை |
5 |
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆரிரு ணடுநாள் வருதி சாரல் நாட வாரலோ எனவே. |
|
- மதுரைப் பெருங்கொல்லனார். |
முடிபு: தோழி, ‘சாரனாட, நடுநாள் வருதி; வாரல்’ எனவும், ‘அன்னை செல்கென்றோள்’ எனவும் சொல்லின் எவன்?
கருத்து: தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 141. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், எனவும், தலைவி, குறிஞ்சி, கூற்று, தோழி, குறுந்தொகை, செந்நாய், கையையுடைய, வருதி, வரும், எட்டுத்தொகை, சங்க, தாய், குற்றம், சொல்லின்