முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 139. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று
(பரத்தையர் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் பரத்தையர் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வாரற்க” என்று கூறியது.)
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு |
5 |
வாரல் வாழிய ரையவெந் தெருவே. | |
- ஒக்கூர் மாசாத்தியார். |
முடிபு: ஐய, அம்பலொடு எம் தெரு வாரல்; வாழியர்!
கருத்து: எம் தெருவிற்கு வரின் பரத்தையர் பழி கூறுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 137 | 138 | 139 | 140 | 141 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, மருதம், பரத்தையர், குறுந்தொகை, வாரல், தெருவிற்கு, அம்பலொடு, காலத்தில், எட்டுத்தொகை, சங்க, இங்கே