முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 13. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 13. குறிஞ்சி - தலைவி கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின் பின் பிரிவாற்றாமல் வருந்திய தன் வேறுபாடுகளை உணர்ந்து கவன்ற தோழியை நோக்கி, ‘‘தலைவரது பிரிவினால்எனது உள்ளம் நோய் கொண்டது; கண்களும் அழகிழந்து பசலையை அடைந்தன’’ என்று தலைவி கூறி ஆற்றாமைக்குக் காரணத்தைப் புலப்படுத்தியது.)
மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற் பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன் நோய்தந் தனனே தோழி பயலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. |
5 |
- கபிலர். |
முடிபு: தோழி, நாடன் நோய் தந்தனன்; அதனால் என் கண்கள் பசலையார்ந்தன.
கருத்து: தலைவன் பிரிவினால் வேறுபாடுகள் உண்டாயின.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 13. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, உடைய, கூற்று, தலைவன், கண்கள், அதனால், நோய், எட்டுத்தொகை, சங்க, நாடன், பெரிய