முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 124. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 124. பாலை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு இன்னா என்றி ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
முடிபு: பெரும, காடு இன்னா என்றிராயின், தமியோர்க்கு மனை இனியவோ?
கருத்து: தலைவியையும் உடன்கொண்டு செல்லுதல் வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 122 | 123 | 124 | 125 | 126 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 124. பாலை - தோழி கூற்று, பாலை, இலக்கியங்கள், தோழி, கூற்று, குறுந்தொகை, இனியவோ, பெரும, தமியோர்க்கு, இன்னா, தலைவியையும், எட்டுத்தொகை, சங்க, உடன்கொண்டு