முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 110. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 110. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, “இனி அவர் வரினும் வாராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து படுவேன்” என்று தலைவி கூறியது.)
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு யாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த |
5 |
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று இன்னா தெறிதரும் வாடையொடு என்னா யினள்கொல் என்னா தோரே. |
|
- கிள்ளிமங்கலங்கிழார். |
முடிபு: தோழி, என்னாயினள் கொல் என்னாதோர், வாராராயினும் வரினும் யாராகியர்?
கருத்து: தலைவர் வாராமையின் யான் இறந்துபடுவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 110. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, முல்லை, வரினும், குறுந்தொகை, கருவிளை, தலைவர், என்னா, இறந்து, எட்டுத்தொகை, வாராவிடினும், சங்க