முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 108. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 108. முல்லை - தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வந்திலர்; யான் உய்யேன்” என்று வருந்திக் கூறியது.)
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயிற் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசில் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே. |
5 |
- வாயிலான் தேவனார். |
முடிபு: தோழி, முல்லை வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று; யான் உய்யேன்.
கருத்து: கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனிப் பொறுத்திரேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 108. முல்லை - தலைவி கூற்று, முல்லை, தலைவி, இலக்கியங்கள், தலைவர், தோழி, கூற்று, குறுந்தொகை, யான், கொண்டன்று, உய்யேன், செவ்வி, கார்ப்பருவம், எட்டுத்தொகை, சங்க, வான்பூச், செவ்வான்