கலித்தொகை - மருதக் கலி 89
யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை வாரல்; நீ வந்தாங்கே மாறு; என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் | 5 |
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது; ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா! பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு, வருந்தல் நின் வஞ்சம் உரைத்து; மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ ? நீ நயந்த, | 10 |
இன்னகை! தீதோ இலேன்; மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர் புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப் பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன் என்று அடி சேர்தலும் உண்டு! | 15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போர்