கலித்தொகை - மருதக் கலி 77
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண், பிறிது யாதும் துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு, இனைபவள் அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல், தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, | 5 |
மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம் மலர் அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்: தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் கொண்டு, நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்மன் உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, 'நின் | 10 |
பெண்டு' எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்; பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல; தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்; | 15 |
மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல் வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்மன் நோய் சேர்ந்த திறம் பண்ணி, நின் பாணன், எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்; ஆங்க | 20 |
'கடைஇய நின் மார்பு தோயலம்' என்னும், இடையும், நிறையும் எளிதோ நிற் காணின், கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெறுகற்பின், நின், வேண்டேன்மன், பெறல், சேர்ந்த, நலம், என்னும், எழில், எனப், மலர், கவின்