கலித்தொகை - குறிஞ்சிக் கலி 63
நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார் தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப் போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம் காக்கும் இடம் அன்று, இனி எல்லா! எவன் செய்வாம்? | 5 |
பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய் விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல் கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; 'ஈங்கு ஆக இருந்தாயோ?' என்று ஆங்கு இற; அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும் | 10 |
மருந்து நீ ஆகுதலான்; இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள் என்னாமை என் மெய் தொடு இஃதோ? அடங்கக் கேள்: நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா, | 15 |
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன் தன்னொடு நின்று விடு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவன், மற்று