கலித்தொகை - பாலைக் கலி - 5
பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம் இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் உமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், | 5 |
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக், கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்? நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே, கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், | 10 |
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ? ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல், பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ? ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள் நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? | 15 |
எனவாங்கு, பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு, எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது, அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்டு, அமைவாளோ, நீர்