கலித்தொகை - குறிஞ்சிக் கலி 49
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை, நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின், கனவில் கண்டு, கதுமென வெரீஇ, புதுவதாக மலர்ந்த வேங்கையை | 5 |
'அது' என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி, பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம் காணும் பொழுதின் நோக்கல் செல்லாது, நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட! போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன | 10 |
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே, மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய், இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே, | 15 |
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து, அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை; இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே, ஒளிறு வேல் வலன் ஏந்தி, 'ஒருவன் யான்' என்னாது, | 20 |
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை அதனால் இரவின் வாரல், ஐய! விரவு வீ அகல் அறை வரிக்கும் சாரல், பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே. | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஈங்கு, வருவதை, இவள்மாட்டு, இன்னாதே, என்பதோ, மற்று, இனிது, இன்ன, என்னாய்