கலித்தொகை - குறிஞ்சிக் கலி 41
பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று; இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள், | 5 |
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து, பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் நெடு வரை ஆசினிப் பணவை ஏறி, கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின், | 10 |
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி, ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா, தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி, குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா, | 15 |
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று; இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே; வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற சூள் பேணான் பொய்த்தான் மலை; | 20 |
பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ? 'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின், திங்களுள் தீத் தோன்றியற்று; இள மழை ஆடும்; இள மழை ஆடும்; | 25 |
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை வளை நெகிழ வாராதோன் குன்று; வாராது அமைவானோ? வாராது அமைவானோ? வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன் ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து | 30 |
நீருள் குவளை வெந்தற்று; மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்; மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத் துன்னான் துறந்தான் மலை; துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்; | 35 |
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில் சுடருள் இருள் தோன்றியற்று; என ஆங்கு நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள் | 40 |
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி, மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து, மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, அல்லன், வாராது, ஆடும், தோன்றின், போலத், துறக்குவன், தோன்றும், பாடுகம், உரியனோ, வாழி, இலங்கும், பொய்த்தற்கு, செய், பாடுற்று, மென், அமைவானோ, அருவித்தே, குன்று, தோன்றியற்று