கலித்தொகை - பாலைக் கலி - 2
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின், மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக் கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும் உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின், | 5 |
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில் ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர் ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை- மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய, இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்றைஇய! | 10 |
தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள், முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை; இல் என, இரந்தார்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, | 15 |
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை; இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என, கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ- | 20 |
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை; என, இவள் புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல் அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று, | 25 |
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல் யாழ் வரைத் தங்கியாங்குத், தாழ்பு, நின் தொல் கவின் தொலைதல் அஞ்சி, என் சொல் வரைத் தங்கினர், காதலோரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருள், போல், ஆகுமோ, பிரியாமை, அல்லதை, பொருளாயின், செயல், சூழ்ந்த, இறந்து, ஈயாமை, ஒன்று, இழிவு, தொல், வரைத், அருங், ஆகம், கற்பினாள், இரந்தோர்க்கு, இவள்