கலித்தொகை - பாலைக் கலி - 19
செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம் பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய! அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து, பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்; | 5 |
மகன் அல்லை மன்ற, இனி செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி, அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை என் திறம் யாதும் வினவல்; வினவின், | 10 |
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய, தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வினை