கலித்தொகை - நெய்தற் கலி 140
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, | 5 |
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி: நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு | 10 |
அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்; அன்னேன் ஒருவனேன், யான்; என்னானும், 'பாடு' எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே, 'ஆடு' எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, | 15 |
நன்னுதல் ஈத்த இம் மா? திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல் ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் கண்டும், கண்ணோடாது, இவ் ஊர் | 20 |
தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும், உணராது, இவ் ஊர் வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் | 25 |
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச் செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும், அறியாது, இவ் ஊர் ஆங்க, என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண் | 30 |
தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல, இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 138 | 139 | 140 | 141 | 142 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பட்ட, செய்த, காமம், நோய், இடும்பை, சாயல், எனில், ஆங்கே