கலித்தொகை - நெய்தற் கலி 135
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி இணை திரள் மருப்பாக, எறி வளி பாகனா அயில் திணி நெடுங் கதவு அமைத்து, அடைத்து, அணி கொண்ட எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப் பயில்திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்: | 5 |
கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்று நின் குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ? ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின் | 10 |
வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ? திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்று நின் புகழ்மைக்கண் பெரியது ஓர் புகராகிக் கிடவாதோ? என ஆங்கு, | 15 |
சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே, அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து, மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே. | 20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 133 | 134 | 135 | 136 | 137 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரியது, கிடவாதோ, மற்று, நின், துறப்பாயால், புன்னைக், மலர்ப், கிளர், தோற்றாளை, நலம், நெடுங்