கலித்தொகை - முல்லைக் கலி 117
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ, பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, எதிரிய தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின் கையது எவன்? மற்று உரை; | 5 |
'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர் மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர் போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள? காண் தக்காய்! எற் காட்டிக் காண்;' காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு | 10 |
காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்! எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்; 'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு மெல்லியது, ஓராது அறிவு. | 15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 149 | 150 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை, Kalithokai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மற்று, காண், ஆயின், முல்லை, யான்