ஐங்குறுநூறு - 48. பாணன் பத்து
தலைவியைப் பிரிந்து தனித்துத் தொலைநாட்டில் வாழும் தலைவனிடம் பாணன் எடுத்துரைக்கிறான். தலைவி இந்தப் பாணனை வேண்டுகிறாள்.
எவ்வளை நெகிழ மேனி வாடப் பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத் துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில் அதுமற்று உண்ர்ந்தனை போலாய் இன்னும் வருதி என்அவர் தகவே. | 471 |
ஒளி மிக்க என் வளையல்கள் கழல்கின்றன. என் மேனி வாடுகிறது. கண்ணில் பனி முத்துக்கள் கொட்டுகின்றன. இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டு அவர் இவள் என் தலைவியை விட்டுவிட்டுப் போய்விட்டார். பாண அவர் தகைமையை இன்னும் பேசிக்கொண்டு வருகிறாய். இது சரியா? தோழி வினவுகிறாள்.
கைவல் சீறியாழ் பாண நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மின் உணரா ராயினும் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யார் ஆகுதல் நோகோ யானே. | 472 |
சீறியாழ் மீட்டுவதில் வல்ல பாண, உன் தலைவன் குறிப்பிஇட்டுச் சென்ற பருவம் இப்போது வந்து நிற்கிறது. அவர் என் நிலைமையை நினைக்காவிட்டால் போகட்டும். தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லையே என்றாகிலும் அவர் நாணவேண்டாமா? அவருக்காக நான்தான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச் செலவுநீ நய்னதனை யாயின் மன்ற இன்னா அரும்படர் எம்வயின் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாணஎம் மறாவா தீமே. | 473 |
பலரும் புகழும் சிறப்பினை உடையவர் உன் குருசில். அவரை நினைத்து அவர் இருக்குமிடத்துக்கு நீ சென்றால் கொடுமையான நினைவுத் துன்பத்தை எனக்கு உண்டாக்கிய அவரது பொய் வல்லமை பற்றி எடுத்துக் கூறு. மறந்துவிடாதே.
மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல் என்னும் நன்றால் அம்ம பாணனது அறிவே. | 474 |
அன்று என் நெற்றி மாசு மறுவற்றுச் சுடரும் நெற்றியாக விளங்கியது. அவர் தன் பெரும் படையுடன் சென்றார். தன்மீது சினம் கொண்டோர் கோட்டையை அழித்த செம்மாப்போடு சென்றார். சினம் கொண்ட குதிரை பூட்டிய தேரில் சென்றார். வழியெங்கும் தூள் பறக்கச் சென்றார். அப்படிச் சென்றவரை அழைத்துக்கொண்டு வருவேன் என்கிறான் பாணன். பாணனின் இந்த அறிவு மிகவும் நன்று. தலைவி சொல்கிறாள்.
நொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப் பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன் எம்வெம் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேரன் பினனே. | 475 |
என் வளையல்கள் கலங்குகின்றன. தோள் வாடுகிறது. கண் தன் வடிவழகை இழந்துவிட்டது. இவற்றைப் பார்த்த சீறியாழ்ப் பாணன் பெரிதும் புலம்புகிறான். ஆர்வம் கொண்ட என் காதலோடு பிரிந்து செஎன்றவர் போலப் பாணன் இல்லை. என்மீது அன்பு காட்டுபவனாக இருக்கிறான்.
கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப பருவம் செய்தன பைங்கொடி முல்லை பல்லான் கோவலர் படலைக் கூட்டும் அன்புஇல் மாலையும் உடைத்தோ வன்புறை பாண அவர்சென்ற நாடே. | 476 |
தொகுதியாகத் திரியும் மேகம் பொழிந்து கார்காலம் எனக் காட்டுகிறது. இது கார் காலந்தான் எனபதைக் காட்டிக்கொண்டு முல்லைப் பூவும் பூத்துக் குலுங்குக்கின்றன. பல வகையான ஆனிரைகளை மேய்க்கும் கோவலர் அந்த முல்லைப் பூக்களைப் ‘படலை’ மாலையாகக் கட்டுகின்றனர். இது என்மீது அன்பு இல்லாத மாலைக் காலம். அன்பு இல்லாத பாணனே இப்படிப்பட்ட மாலைக்காலம் அவர் சென்ற நாட்டிலும் இஇருக்குமா?
பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள் கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயின் காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே. | 477 |
பனியில் நனையும் மலர் போன்ற கண்டில் பசலை நோய் பாயந்துள்ளத்து. வெறுப்பை உண்டாக்கும் துயரத்ததோடு அவரை நினைத்துக் கொண்டு வருந்துகிறாள். அவள் நெஞ்சுக்கு உய்தி தரும் துணையாக அவர் இருக்கும் சிறுமலையில் தங்குவாய் ஆயின் பாண எம்முடையவர் தேரைக் காணலாம். அவ,ருக்கு எடுத்துரைக்கலாம்.
நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லியது உரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே. | 478 |
நான் இங்குக் காலம் கடத்துகிறேன் என்ற என் கொடுமையை அவள் தூற்றுகிறாள். வாடிய முகத்துடன் இருக்கிறாள். வேறோன்றை நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் என் விருப்பம் மிக்க காதலி. பிரிவு நோயால் மெலிந்துபோயிருக்கிறாள். பாண இதனைத் தானே நீ சொல்கிறாய். நானே அறிவேன். தலைவன் சொல்க்கிறான்.
சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும் அரும்பனி கலந்த அருளில் வாடை தனிமை எள்ளும் பொழுதில் பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே. | 479 |
பாண மேலும் சொல். நீ சொல்லச் சொல்ல என் காதுகளுக்கு இனிமையாக உள்ளது. பல நாடுகள் இடைப்பட்ட தொலைவில் இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னிடம் நாள்தோறும் சொல். வாடைக் காற்று பனித்துளி கலந்து வீசுகிறது. தனிமையை எண்ணி நொந்துகொண்டிருக்கிறேன். இந்த வேளையில் என் பனிமலர் நெடுங்கண்ணாள் கூறிய செய்திகளை எனக்குச் சொல்.
நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டு மருளா தோயே. | 480 |
உனக்கு நான் பாணன் இல்லை. நீ எனக்குக் குரிசிலும் அல்லை. உன் காதலி தன் மனையில் புலம்பிக்கொண்டிருக்கிறாள். ஈர மலரிதழ் போன்ற அவள் கண்கள் உகுத்த கண்ணீர் கேட்டும் அவளுக்கு அருள் புரியாமல் இருக்ககிறாயே..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பாணஎம், எம்வயின், வாடிய, முல்லை, எமக்கே, காதலி, அரும்படர், யாயின், குருசில், மன்ற, கைவல், செய்த, பருவம், பாணன்