அகநானூறு - 81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் |
5 |
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த |
10 |
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம் மை எழில் உண்கண் கலுழ ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே? |
15 |
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -