அகநானூறு - 52. குறிஞ்சி
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின், "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
5 |
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் சிலையுடை இடத்தர் போதரும் நாடன் நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என |
10 |
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோய்' எனச் செப்பாதீமே. |
15 |
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலைமகள், தோழி