அகநானூறு - 395. பாலை
தண் கயம் பயந்த வண் காற் குவளை மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் பனி வார் எவ்வம் தீர, இனி வரின், நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
5 |
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
10 |
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, ஆடு கழை இரு வெதிர் நரலும் கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
15 |
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 393 | 394 | 395 | 396 | 397 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -